மாப்பிள்ளைக்கு வந்த மணமகள் வீடியோ-பணம் கொடுத்த தாயார் -கடைசியில் நடந்த விபரீதம்

 

மாப்பிள்ளைக்கு வந்த மணமகள்  வீடியோ-பணம் கொடுத்த தாயார்  -கடைசியில் நடந்த விபரீதம்


ஒரு பெண்ணின் முன்னாள் காதலன், அந்த பெண்ணை கட்டிக்க இருக்கும் மாப்பிள்ளைக்கு ,அவர்களின் நெருக்கமான வீடியோவை அனுப்பியதால் அவர் கைது செய்யப்பட்டார்

மாப்பிள்ளைக்கு வந்த மணமகள்  வீடியோ-பணம் கொடுத்த தாயார்  -கடைசியில் நடந்த விபரீதம்


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விராரைச் சேர்ந்த ஒரு 22 வயதான இளம் பெண்,அதே பகுதியை சேர்ந்த 24 வயதான வாலிபரை காதலித்தார் .அதனால் இருவரும் அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் ஒன்றாக ஊர் சுற்றினார்கள் .அந்த நேரத்தில் அந்த காதலன் அந்த காதலியோடு உல்லாசமாக இருக்கும் வீடியோவை எடுத்து வைத்துள்ளார் .இது அந்த காதலிக்கு தெரியாது .அதன் பிறகு அந்த காதலர்களின் பெற்றோர் அவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை .அதன் காரணமாக அவர்கள் பிரிந்து விட்டார்கள் .
பின்னர் அந்த பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர் .இந்த விஷயம் அந்த பெண்ணின் காதலனுக்கு தெரிந்து விட்டது .
அதன் பிறகு அந்த காதலன் அவரிடம் உள்ள ,அந்த பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் வீடியோவை காமித்து பணம் பறிக்க முயன்றார் .
அதன் காரணமாக அந்த காதலியின் தாயாரிடம் அந்த வீடியோவை காமித்து, பல லட்சங்கள் கேட்டு மிரட்டினார் .அப்போது அதை பார்த்த அந்த பெண்ணின் தாயார் அந்த காதலனிடம் 1.5 லட்ச ரூபாய் பணம் கொடுத்தார் .ஆனால் அதன் பிறகு அந்த காதலன் அந்த பெண்ணோடு இருக்கும் வீடியோவை அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளவிருக்கும் மணமகனுக்கு அனுப்பினார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மணமகன் உடனே அந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த காதலியும் அவரின் தாயாரும் அந்த காதலன் மீது போலீசில் புகார் கொடுத்தார்கள் ,போலீசார் அந்த காதலன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்

மாப்பிள்ளைக்கு வந்த மணமகள்  வீடியோ-பணம் கொடுத்த தாயார்  -கடைசியில் நடந்த விபரீதம்