ஆஸ்திரேலியாவில் 3 மீட்டர் நீளம் கொண்ட சுறா கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு

 

ஆஸ்திரேலியாவில் 3 மீட்டர் நீளம் கொண்ட சுறா கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரபல கடற்கரையில் மூன்று மீட்டர் நீளம் கொண்ட சுறாவால் தாக்கப்பட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவில் இன்று காலை பிரிஸ்பேனுக்கு தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிங்ஸ்கிளிஃப் என்ற இடத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது கொண்ட ஒருவர் சர்ஃபிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மீட்டர் நீளம் கொண்ட சுறா அவரது காலை கடித்தது. சுறாவை எதிர்த்து அவர் போராடினார். அங்கிருந்த பல போர்டு ரைடர்ஸ் அவரை கரைக்கு மீட்டு கொண்டு வந்தனர். அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் 3 மீட்டர் நீளம் கொண்ட சுறா கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு சுறா தாக்குதலால் நடந்த மூன்றாவது இறப்பு இதுவாகும். உலகில் அதிகளவில் மனிதர்களை சுறா தாக்குவது ஆஸ்திரேலியா தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் சுறா தாக்குதலால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. சிட்னியின் தரோங்கா மிருகக்காட்சிசாலையின் தகவல்கள்படி, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 27 சுறா தாக்குதல்கள் நடந்தன. ஆனால் சுறாவால் யாரும் இறக்கவில்லை.