மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி புதுமாப்பிள்ளை பலி!

 

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி புதுமாப்பிள்ளை பலி!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி புதுமாப்பிள்ளை பலி!
rep image

ஈரோடு, நசியனூர் குருமனைகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் (29) . இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. ஜெகதீஷ் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், ஜெகதீஷ் வேலைக்கு சென்றுவிட்டு ஈரோடுக்கு திரும்பி வரும்போது, நசியனூர் அருகே ஈரோட்டிற்கு சரக்கு ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இதில், நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்ட ஜெகதீஷ் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி புதுமாப்பிள்ளை பலி!

இதுகுறித்து, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெகதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜெகதீஷ் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனை திரண்டு வந்து கதறி அழுதனர். சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.