“ஆசையும் தீர்த்துக்கிட்டு,காசையும் பறிச்சிக்கிட்டு ..”கல்லூரி காதலனால் மோசம் போன பெண் .

 

“ஆசையும் தீர்த்துக்கிட்டு,காசையும் பறிச்சிக்கிட்டு ..”கல்லூரி காதலனால் மோசம் போன பெண் .

தன்னோடு கல்லூரியில் படித்த ஒரு காதலனின் கல்யாண ஆசை வார்த்தையில் மதி மயங்கிய ஒரு பெண், அவரிடம் பல லட்சங்களை இழந்து நிற்கும் அவலம் பல பெண்களுக்கு பாடமாக அமையும்.

“ஆசையும் தீர்த்துக்கிட்டு,காசையும் பறிச்சிக்கிட்டு ..”கல்லூரி காதலனால் மோசம் போன பெண் .

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வைட்ஃபீல்டில் , மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்திரனில் தத்தா என்ற 31 வயதான பீகாரை சேர்ந்த நபரை காதலித்தார்.இருவரும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்தார்கள் .அப்போது அந்த காதலன் தத்தா அந்த காதலியிடம் நாம் எதிர்காலத்தில் கல்யாணம் செய்து கொண்டு வசதியாக வாழ நிறைய பணம் வேண்டும் அதனால் இப்போதிலிருந்தே இருவரும் ‘ஜாயிண்ட் அக்கௌன்ட்’ ஆரம்பித்து பணம் சேர்ப்போம் என்று ஆசை வார்தைகளை கூறியுள்ளார் .
அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அந்த அக்கௌண்டில் தான் ஆறு ஆண்டுகளாக வேலை பார்த்து சம்பாதித்த 11.5 லட்ச ரூபாயை அதில் முதலீடு செய்தார் .
அதன் பின்னர் அவரின் காதலன் அந்த பணத்தை எடுத்து கொண்டு தன்னுடைய சொந்த ஊரான பீகாருக்கு சென்று விட்டார் .தன் காதலன் நீண்ட நாட்களாக திரும்பி வராததால் அவருக்கு அந்த பெண் பலமுறை போன் செய்து பார்த்தார் .அப்போதெல்லாம் அந்த காதலன் போனை எடுக்கவில்லை .அந்த காதலனை நம்பி பணமும் போச்சு ,தன்னுடைய கல்யாண கனவும் போச்சு என்று அந்த பெண் புலம்பினார்.அதனால் அவரின் ஓடிப்போன காதலன் மீது அந்த பெண் பணமோசடி புகாரை போலீசில் பதிவுசெய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி அவரின் சொந்த ஊரான பீகாரில் உள்ள கிஷன்கஞ்சிற்கு சென்றுள்ளார்கள் .

“ஆசையும் தீர்த்துக்கிட்டு,காசையும் பறிச்சிக்கிட்டு ..”கல்லூரி காதலனால் மோசம் போன பெண் .