நள்ளிரவில் வந்த வீடியோ கால் -நிர்வாணமாக நின்ற ஆண்கள்-புது டெக்னிக்கில் பல லட்சம் மோசடி

 

நள்ளிரவில் வந்த வீடியோ கால் -நிர்வாணமாக நின்ற ஆண்கள்-புது டெக்னிக்கில் பல லட்சம் மோசடி

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் , ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் சமூக ஊடக தளங்களில் தங்களை பெண்களாகக் காட்டிக் கொண்டு , புனேவைச் சேர்ந்த குறைந்தது 100 ஆண்களை வீடியோ அழைப்புகளில் நிர்வாணமாக அலையவிட்டு  அவர்களை ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டினர்

நள்ளிரவில் வந்த வீடியோ கால் -நிர்வாணமாக நின்ற ஆண்கள்-புது டெக்னிக்கில் பல லட்சம் மோசடி

ராஜஸ்தானை  சேர்ந்த அந்த இரு வாலிபர்களும் சவுண்ட் மாடுலேட்டிங் என்ற மென்பொருள் மூலம் தங்களின் குரலை பெண் குரலாக மாற்றி, பல ஆண்களுக்கு போன் செய்வார்கள் .அப்போது அவர்களிடம் வலையில் சிக்கும் ஜொள்ளர்களிடம் ஆசையாகவும் ,ஆபாசமாகவும் பேசுவார்கள் .பின்னர் அந்த ஆண்களுக்கு நள்ளிரவில் வீடியோ கால் பேசுவார்கள் .அப்போது அவர்கள் உண்மையான பெண்களின் வீடியோவில் இவர்களின் குரலை டப்பிங் செய்து அந்த ஆண்களை ஏமாற்றி அவர்களை நிர்வாணமாக நிற்க சொல்வார்கள் .அப்படி சிக்கி நிர்வாணமாக நிற்கும் ஆண்களின் வீடியோவை ரெக்கார்ட் செய்து விடுவார்கள். அதன் பிறகு அந்த ஆண்களின்  நிர்வாண வீடியோவை காமித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவார்கள் .அப்படி பணம் தர மறுத்தால்  அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டுவார்கள் .இப்படியாக அவர்கள் 100கும்  மேற்பட்ட ஆண்களை  ஏமாற்றி  பல லட்சங்கள் சம்பாதித்தனர் .இது பற்றி போலீசார் கேள்விப்பட்டு அந்த இரு வாலிபர்களையும் கைது செய்தனர் .