சிங்கப்பூர் வேலை என்று ஆசை காட்டிய ஆண் -நம்பி சென்ற பெண் -எதையெல்லாம் இழந்தார் தெரியுமா ?

 

சிங்கப்பூர் வேலை என்று ஆசை காட்டிய ஆண் -நம்பி சென்ற பெண் -எதையெல்லாம் இழந்தார் தெரியுமா ?


ஒரு இளம் பெண்ணை வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை காமித்து ,பணம் மற்றும் கற்பை பறித்த ஆண் நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்

சிங்கப்பூர் வேலை என்று ஆசை காட்டிய ஆண் -நம்பி சென்ற பெண் -எதையெல்லாம் இழந்தார் தெரியுமா ?


மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் வாட்கோன்ஷேரியில் வசிக்கும் சந்தீப் தாதராவ் வேபிஸ் என்ற நபர் சமூக ஊடகத்தின் மூலம் அங்குள்ள ஒரு இளம் பெண்ணோடு நட்போடு பழகினார் .அப்போது அந்த நபர் அந்த பெண்ணிடம் தனக்கு சிங்கப்பூரில் பலரை தெரியுமென்றும் ,அங்கு அவரை நர்ஸ் வேலைக்கு அனுப்பி லட்சக்கணக்கில் சம்பாதிக்க வழி செய்வதாக கூறினார் .அதை அந்த பெண் உண்மையென்று நம்பினார் .அதனால் அவர் கேட்டபோதெல்லம் பணத்தை கொடுத்தார் .மேலும் அவரை நம்பி தன்னுடைய டெபிட் கார்டு மற்றும் க்ரெடிட் கார்டு போன்றவற்றையும் கொடுத்தார்
அந்த கார்டை வாங்கிய அவர், அவரின் அக்கௌன்ட்டிலிருந்த 11 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டார் .அதன் பின்னர் அவர் அந்த பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளார் .அதனால் அந்த பெண், தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்து அவரிடம் பணத்தை கேட்பதற்காக அவரை தேடி அடிக்கடி சென்றுள்ளார் .அப்போது அந்த நபர் அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .மேலும் பணத்தையும் கொடுக்காமல் மிரட்டி ஏமாற்றியுள்ளார் .இதனால் அந்த பெண் மிகவும் மன உளைச்சலாகி அங்குள்ள காவல் நிலயத்தில் அந்த சந்தீப் மீது புகார் கொடுத்தார் .
அந்த பெண்ணின் புகாரை பெற்று கொண்ட போலீசார் ,அந்த சந்தீப் மீது வழக்கு பதிந்தனர் .பின்னர் போலீசுக்கு அந்த பெண் போனதை தெரிந்து கொண்ட சந்தீப் தலை மறைவாகிவிட்டார் .போலீசார் அவரை கைது செய்ய தேடி வருகின்றனர் .

சிங்கப்பூர் வேலை என்று ஆசை காட்டிய ஆண் -நம்பி சென்ற பெண் -எதையெல்லாம் இழந்தார் தெரியுமா ?