“நாலாயிரம் கொடுத்து நாள் முழுவதும் கெடுத்து …” 16 வயது பெண்ணின் பரிதாப கதை..
ஒரு டீனேஜ் பெண்ணிடம் பணத்தையும் வாங்கிவிட்டு அதை வாங்க சென்ற அந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .
கொல்கத்தாவில் கோபிந்தாபூர் காலனி பகுதியில் வசிக்கும் நந்து என்ற வாலிபர் வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்தார் .அவரின் பொழுது போக்கு என்னவென்றால் சமூக ஊடகத்தில் பெண்களுக்கு வலை வீசுவார் .அவரிடம் சிக்கும் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பணம் பறித்து ,பின்னர் அவர்களின் கற்பையும் பறிப்பார் .
அதன்படி அவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த ஒரு 16 வயது பெண் சிக்கினார் .அவரிடம் நந்து பல மாதங்களாக ஊடகத்தில் அரட்டையடித்து வந்துள்ளார் .அப்போது அவசர தேவைக்காக நாலாயிரம் ரூபாய் பணம் அந்த பெண்ணிடம் கேட்டார் ,அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் அவரின் அக்கௌண்டுக்கு நாலாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைத்தார் ,
அதன் பின்னர் அந்த பெண் அவரிடம் தான் கொடுத்த கடனை பலமுறை ஊடகத்தின் வழியாக தொடர்பு கொண்டு கேட்டார் .ஆனால் அவர் தராமல் ஏமாற்றி வந்துள்ளார் .கடந்த வியாழக்கிழமையன்று அந்த பெண் நந்துவை தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை கேட்ட போது அவர் அந்த பெண்ணை நேரில் வர சொன்னார் .அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் அவரின் வீட்டிற்கு சென்றார் .அப்போது நந்து அந்த பெண்ணை அவரின் வீட்டில் அடைத்து வைத்து நாள் முழுவதும் பலாத்காரம் செய்துள்ளார் .அதனால் அந்த பெண் அன்று மாலையில்தான் அவரின் வீட்டை விட்டு வெளியே வர முடிந்தது .அதன் பிறகு அந்த பெண் நந்து மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதன் பின்னர் நந்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.