“கட்டியணைக்கும்போது கட்டையோடு வந்துட்டானுங்களே …”காதலியை பார்க்க வந்தவருக்கு நேர்ந்த கதி.

 

“கட்டியணைக்கும்போது கட்டையோடு வந்துட்டானுங்களே  …”காதலியை பார்க்க வந்தவருக்கு நேர்ந்த கதி.


காதலியின் பேச்சை நம்பி அவரை சந்திக்க சென்ற காதலனை அவரின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது

“கட்டியணைக்கும்போது கட்டையோடு வந்துட்டானுங்களே  …”காதலியை பார்க்க வந்தவருக்கு நேர்ந்த கதி.


உத்தரபிரதேசத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மியாவுன் கிராமத்தைச் சேர்ந்த ஃபிரோஸ் என்ற வாலிபர் , கஞ்ச்துந்த்வாரா பகுதியில் உள்ள சதாம் நகரில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்தார் . அந்த பெரோஸ் டெல்லியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் .அந்த பெண்ணும் அந்த காதலனும் அவர்கள் வீட்டிற்கு தெரியாமல் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் .இருவரின் வீட்டிலும் சில நாட்களுக்கு பிறகு அவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது .அதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பெண்ணை கண்டித்துள்ளார்கள் .
‘பின்னர் அந்த பெண் அந்த பெரோசை அழைத்து கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டார் .அதன் பிறகு சில நாடுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் தங்களின் சொந்த கிராமத்திற்கு வந்து விட்டனர் .பிறகு அந்த பெண் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் .
இந்த சம்பவத்த்தால் அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பெரோஸ் மீது கடுமையான கோபத்தில் இருந்தனர் .இதனால் அவரை பழி வாங்க நினைத்தனர் .அதன் படி அவர்களின் மகளை விட்டு அந்த காதலனை வீட்டுக்கு கூப்பிட சொன்னார்கள் .அந்த பெண்ணும் அவர்கள் பேச்சை நம்பி வீட்டுக்கு கூப்பிட்டார் .கடந்த சனிக்கிழமை இரவு காதலியை ஆசையாக சந்தித்து ஜாலியாக இருந்த காதலனை அந்த பெண்ணின் உறவினர்கள் பலர் சேர்ந்து அடித்து காயப்படுத்தி வெளியே வீசினர் .பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெரோஸ் மருத்துவமனையிலிருக்கிறார். .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் உறவினர்கள் பலரை சிறையில் அடைத்துள்ளனர்