சோறு போட்ட பொண்டாட்டியை கூறு போட்ட புருஷன் -மூட நம்பிக்கையின் விளைவு..

 

சோறு போட்ட பொண்டாட்டியை கூறு போட்ட புருஷன் -மூட நம்பிக்கையின் விளைவு..

ஒரு நபர் தன்னுடைய மூட நம்பிக்கையால் தன்னுடைய மனைவியை கடவுளுக்கு நரபலி கொடுத்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் .

மத்திய பிரதேசத்தின் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள பசவுடா கிராமத்தில் ஒரு 50 வயது கணவன் தன்னுடைய 45 வயது மனைவி மற்றும் இரண்டு மகன்களோடு வசித்து வந்தார் .அந்த நபருக்கு மூட நமபிக்கையில் அதிக நம்பிகையுடையவர் .இதனால் அவர் கடவுளை திருப்திப்படுத்துகிறேன் என்று அடிக்கடி உயிர்களை தன் வீட்டில் பலியிடுவாராம் .அதன்படி சென்ற வாரம் தன வீட்டில் ஒரு ஆட்டை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தினார் .


பிறகு கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு கடவுள் அவரின் கனவில் தோன்றியதாகவும் , அப்போது தன்னுடைய மனைவியை பலியிட சொல்லி கேட்டதாகவும் கூறி , புதன் கிழமை இரவு அவரின் 45 வயது மனைவியை இரண்டாக வெட்டி தலையை ஒரு பக்கமும் , உடலை இன்னொரு பக்கமும் வைத்து அவர் பூஜைகள் செய்து அன்று இரவு அங்கேயே புதைத்து விட்டு தலை மறைவாகிவிட்டார் .மறுநாள் அவர் மனைவியை நரபலி கொடுத்த விஷயம் ஊருக்குள் பரவி , அது போலீசுக்கும் தெரிந்து அங்கு வந்த போலீசார் அவரின் மகன்களை விசாரித்தபோது தன்னுடைய தந்தை இப்படி கடவுள் நம்பிக்கையால் தன்னுடைய அம்மாவை பலி கொடுத்துவிட்டு ஓடிவிட்டதாக கூறினார்கள் .இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

சோறு போட்ட பொண்டாட்டியை கூறு போட்ட புருஷன் -மூட நம்பிக்கையின் விளைவு..