“கல்யாணமான என் தங்கையோட ஏண்டா கடலை போடுறே” -சகோதர்களால் சாக்கில் அடைக்கப்பட்ட வாலிபர்

 

“கல்யாணமான என் தங்கையோட ஏண்டா கடலை போடுறே” -சகோதர்களால் சாக்கில் அடைக்கப்பட்ட வாலிபர்

திருமணமான தன் தங்கையோடு போனில் பேசி வந்த ஒரு வாலிபரை அந்த பெண்ணின் சகோதர்கள் அடித்து ஒரு கோணிப்பையில் அடைத்து ஆற்றில் தூக்கி வீசிய கொடுமை நடந்துள்ளது .

“கல்யாணமான என் தங்கையோட ஏண்டா கடலை போடுறே” -சகோதர்களால் சாக்கில் அடைக்கப்பட்ட வாலிபர்

குஜராத்தின் கெடாவில் உள்ள சிக்லோட் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் ரத்தோட் என்ற 29 வயதான நபர் லட்சுமி என்ற கல்யாணமான பெண்ணோடு அடிக்கடி போனில் பேசி வந்தார் .இருவரும் இரண்டு ஆண்டுகளாக போனிலும் இணைய தளத்திலும் அரட்டையடித்து வந்துள்ளார்கள் .அந்த பெண் லட்சுமி தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் அந்த வாலிபர் ரத்தோட்டுடன் ஜாலியாக இருந்து வந்துள்ளார் .இந்த விஷயம் நாளடைவில் அவரின் கணவருக்கு தெரிய வந்துள்ளது .மேலும் அந்த பெண்ணின் சகோதர்களான

தர்மேந்திரா மற்றும் சஞ்சய் ஆகியோருக்கும் தெரிந்து விட்டது .அதனால் அந்த சகோதர்கள் அந்த வாலிபரிடமும் தங்களின் தங்கையிடமும் இந்த உறவை கை விடுமாறு கூறினர் .ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்காமல் மீண்டும்  ஜாலியாக போனில் கடலை போட்டு வந்துள்ளார்கள் .

அதனால் கடந்த சனிக்கிழமையன்று  அந்த வாலிபர் ரத்தோடிடம் சென்று ,’கொஞ்சம் உன்னோடு பேசவேண்டும்‘  என்று கூறி ஒரு காட்டு பகுதிக்கு அவரை அழைத்து சென்றார்கள் .அங்கு வைத்து அவரை இருவரும் கடுமையாக தாக்கினார்கள் .பின்னர் அவர்களின் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை ஒரு சாக்கு பையில் அடைத்து அங்குள்ள ஒரு குளத்தில் தூக்கி வீசி சென்று விட்டார்கள் .

 ஒரு நாளைக்கு பிறகு மயக்கம் தெளிந்த ரத்தோட் அந்த வழியில் போவோரிடம் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டு கத்தினார் .பிறகு அவர்கள் அவரை காப்பாற்றினார்கள் .அதன் பிறகு அவர் அருகிலுள்ள காவல் நிலையம் சென்று தர்மேந்திரா மற்றும் சஞ்சய் ஆகியோர் மீது புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .

“கல்யாணமான என் தங்கையோட ஏண்டா கடலை போடுறே” -சகோதர்களால் சாக்கில் அடைக்கப்பட்ட வாலிபர்