2 கிலோ அரிசி கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சி !! வீடியோவை சமூகவலைதளத்தில் போடுவதாகவும் மிரட்டல் !!

 

2 கிலோ அரிசி கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சி !! வீடியோவை சமூகவலைதளத்தில் போடுவதாகவும் மிரட்டல் !!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்ற வழக்குகள் கவலை அளிக்கும் விஷயமாகிவிட்டது. தற்போது, ஊரடங்கு காலத்திலும் குற்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஒரு ஒப்பந்தக்காரர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு 2 கிலோ அரிசி கொடுப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த வழக்கு மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்ஜேபியின் கிழக்கு புல்வாரி காவல் நிலையத்தைச் சேர்ந்த தனத்லா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், 2 கிலோ அரிசி தருவதாக கூறி பக்கத்து வீட்டில் வசிக்கும் முஸ்பீர் ரெஹ்மான் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். இதை நம்பி அந்தப் பெண் வீட்டிற்கு வந்த பிறகு, முஸ்பீர் ரஹ்மான் அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார், ஆனால் அந்த பெண் ஓடிவந்து நடந்த முழு சம்பவத்தையும் அவள் கணவருக்கு தெரிவித்தாள். இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் கணவர் முஸ்பீர் ரஹ்மானின் வீட்டில் மெக்கானிக்காக பணிபுரிகிறார்.

2 கிலோ அரிசி கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சி !! வீடியோவை சமூகவலைதளத்தில் போடுவதாகவும் மிரட்டல் !!

முஸ்பீர் ரஹ்மானே தொழில் ரீதியாக ஒரு ஒப்பந்தக்காரர். சில காலத்திற்கு முன்பு அவர் அந்த பெண்ணின் ஆட்சேபனைக்குரிய வீடியோவையும் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. “திங்களன்று முஸ்பீர் ரஹ்மானின் வீட்டிற்கு 2 கிலோ அரிசி எடுக்க சென்றபோது ஆட்சேபனைக்குரிய வீடியோவைக் காட்டி அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் சம்மதிக்காமல் போனதால் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார். தற்போது அவர் மீது வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.