ஆசை வார்த்தை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; போக்சோவில் கைது!

 

ஆசை வார்த்தை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; போக்சோவில் கைது!

ஓசூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (30). இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், அப்பகுதியில் சிற்றுண்டி கடையை நடத்தி வரும் வீட்டிற்கும் குடிநீர் விநியோகம் செய்து வந்த வினோத், அந்த வீட்டில் இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

ஆசை வார்த்தை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; போக்சோவில் கைது!

இதனை பற்றி சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவர்கள் ஓசூர் அனைத்து மகளியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், வினோத் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், வினோத் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.