‘இணையதளத்தில் வைரலான பாம்புக் கறி வீடியோ’.. சமைத்து சாப்பிட்ட நபர் கைது!

 

‘இணையதளத்தில் வைரலான பாம்புக் கறி வீடியோ’.. சமைத்து சாப்பிட்ட நபர் கைது!

சேலம் மாவட்டத்தில் பாம்பு கறியை சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் டிக் டாக் செயலி புழக்கத்தில் வந்ததில் இருந்து, மக்கள் தாங்கள் செய்யும் புதிதான விஷயங்கள் எல்லாத்தையும் வீடியோ ஆக வெளியிட ஆரம்பித்தனர். அதில் ஒரு சில வீடியோக்கள் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டாலும், பல வீடியோக்கள் விவகாரமானதாகவே இருந்தது. தற்போது டிக் டாக் செயலி முடக்கப்பட்டும், மக்கள் வீடியோ வெளியிடுவதை நிறுத்தவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் பாம்புக்கறி சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘இணையதளத்தில் வைரலான பாம்புக் கறி வீடியோ’.. சமைத்து சாப்பிட்ட நபர் கைது!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சுரேஷ் என்ற நபர் அவரது நண்பர்களுடன் பாம்புக்கறி சமைத்து சாப்பிட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வனத்துறையினர் கவனத்துக்கு எட்டியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த அதிகாரிகள், உடனடியாக சுரேஷை கைது செய்தனர். மேலும், அவருடன் பாம்புக்கறி சாப்பிட்ட 3 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர். சுரேஷும் அவரது நண்பர்களும் பாம்பை கொன்று, சமைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.