குடிக்க பணமில்லை… சிசிடிவி கேமராவை ஆட்டையப்போட்ட ஆசாமி சிக்கினான்!

 

குடிக்க பணமில்லை… சிசிடிவி கேமராவை ஆட்டையப்போட்ட ஆசாமி சிக்கினான்!

சென்னை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் மதுவாங்க பணம் இல்லாததால் சிசிடிவி கேமராக்களைத் திருடி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

அஸ்தினாபுரம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை மட்டும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சிட்லபாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சிசிடிவி கேமராக்களைத் திருடியது திரு.வி.க நகரைச் சேர்ந்த தங்கராஜ் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்ததில் குடிக்க பணம் இல்லாததால் சிசிடிவி கேமராக்களைத் திருடியதாகக் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரிடம் இருந்து 3 சிசிடிவி கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. குடிக்க பணம் இல்லாததால் சாலை, வீடுகளில் இருக்கும் சிசிடிவி கேமராவை திருடி விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.