10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது!

 

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் எரும்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். விவசாயி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் சிவகுமாரிடம் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களை அவதூறாக பேசி, சிவகுமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது!

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் சிவகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.