மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
தென்காசி
தென்காசி அருகே வீட்டில் தனியாக இருந்த மன வளர்ச்சி குன்றிய பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீர்குளம் சோழன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், மனவளர்ச்சி குன்றிய 22 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் பெற்றோர் வெளியே சென்றதால், அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதேபகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற நபர், வீடுபுகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
வீட்டிற்கு திரும்பிய நீலாவதி, தனது மகளுக்கு நிகழ்ந்த கொடுமையை நேரில் கண்டு கூச்சலிட்டு உள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் திரண்ட நிலையில், பெரியசாமி அங்கிருந்து தப்பியோடினார். இதனை தொடர்ந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த உறவினர்கள், இந்த சம்பவம் குறித்து வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பெரியசாமியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.