பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, வெளியே சொன்னால் கொன்றுடுவேன் என மிரட்டியவர் கைது!

 

பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, வெளியே சொன்னால் கொன்றுடுவேன் என மிரட்டியவர் கைது!

செங்கல்பட்டு அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை வெளியே சொன்னால் குடும்பத்தோடு எரித்துக் கொன்று விடுவோம் என மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வடக்கு வாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் நாகதேவி (வயது 18. ) பெற்றோர்கள் இல்லாததால் பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார். நாகதேவி கடந்த 21ஆம் தேதி ரேஷன் கடைக்கு சென்று கடை திறந்து உள்ளதா ? என பார்த்துவிட்டு ரேஷன் அட்டை எடுக்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது , நாகதேவியை பின் தொடர்ந்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் (வயது 45 ), அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டு அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, வெளியே சொன்னால் கொன்றுடுவேன் என மிரட்டியவர் கைது!

 

அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த நாக தேவியின் பாட்டி ஆண்டாயி, கோபாலின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். உடனே கோபால், நாகதேவி மற்றும் அவர் பாட்டியையும் வெளியில் கூறினால் குடும்பத்தோடு கொளுத்தி விடுவேன் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், அணைக்கட்டு காவல்நிலையத்தில் நாகதேவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபாலை கைது விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்