தாய் குளித்த வீடியோவை காட்டி மகளை சீரழித்த காமுகன் கைது!

 

தாய் குளித்த வீடியோவை காட்டி மகளை சீரழித்த காமுகன் கைது!

வேலூர்

குடியாத்தம் அருகே பெண்ணின் அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி, அவரது இரு மகள்களுக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்த நபரை போலீசார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு உஷாராணி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், சிவராமன் வீட்டின் அருகே வசித்து வரும் யுவராஜ் (50) என்பவர், உஷாராணி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

தாய் குளித்த வீடியோவை காட்டி மகளை சீரழித்த காமுகன் கைது!

தொடர்ந்து, அதனை உஷாராணியின் பெரியமகள் திவ்யாவிடம் காண்பித்து, இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் அச்சமடைந்த திவ்யாவை அவர் மிரட்டி கடந்த 6 ஆண்டுகளாக தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், அவரிடமிருந்து மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து வந்துள்ளார். இதுகுறித்து திவ்யா யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்ததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட யுவராஜ், இதேபாணியில் அவரது தங்கையிடமும் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு ஒப்புகொள்ளாத திவ்யாவின் தங்கை அங்கிருந்து தப்பிச்சென்று நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து யுவராஜின் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்ட உஷாராணி மற்றும் அவரது இளைய மகளையும், யுவராஜ் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

தாய் குளித்த வீடியோவை காட்டி மகளை சீரழித்த காமுகன் கைது!

இதுதொடர்பாக, குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், திவ்யா வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமாரை சந்தித்து கண்ணீர் மல்க புகார் கடிதம் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் யுவராஜை கைதுசெய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.