போதையில் வீட்டு உரிமையாளர் மகனை தீ வைத்துக் கொளுத்திய நபர் கைது!

 

போதையில் வீட்டு உரிமையாளர் மகனை தீ வைத்துக் கொளுத்திய நபர் கைது!

தூத்துக்குடி அருகே வீட்டை காலி செய்ய சொன்னதால் ஏற்பட்ட பிரச்னையில், ஒரு நபர் வீட்டு உரிமையாளர் மகனை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெற்கு காட்டன் தெருவில் வசித்து வந்தவர் அண்ணாமலை. அப்பகுதியில் இவரது தந்தை நடராஜனுக்கு சொந்தமான 20 வீடுகளில், ஒரு வீட்டில் இவர் தங்கி வந்த நிலையில் மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அங்கு வாடகைக்கு இருந்த மரிய அந்தோணி தினேஷ் என்பவர் அடிக்கடி மது போதையில் தகராறு செய்து கொண்டே வந்திருக்கிறார்.

போதையில் வீட்டு உரிமையாளர் மகனை தீ வைத்துக் கொளுத்திய நபர் கைது!

இது குறித்து அண்ணாமலை தனது தந்தையிடம் தெரிவிக்க, நடராஜன் அவரை வீட்டை காலி செய்ய வைத்துள்ளார். இதன் காரணமாக அவர்கள் மீது கோபத்தில் இருந்த அந்தோணி நேற்று இரவு, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 பைக்குகளையும் தீயிட்டு கொளுத்தியிருக்கிறார். தீ மளமளவென அண்ணாமலை வீட்டுக்கும் பரவியதால், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த அவர் உடல் கருகி உயிரிழந்தார்.

போதையில் வீட்டு உரிமையாளர் மகனை தீ வைத்துக் கொளுத்திய நபர் கைது!

அண்ணாமலையில் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்தோணியை தேடி வருகின்றனர். அண்ணாமலையின் மனைவி மற்றும் மற்றொரு மகன் மாடியில் உறங்கிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு ஏதும் ஆகவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.