பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்ற நபர் கைது – 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்

 

பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்ற நபர் கைது – 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. கார்த்திக் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட இருந்தனர்.

பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்ற நபர் கைது – 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்

அப்போது, கழுகூரணி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற முகமது உம்ரூஸ் ஜமீன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர்.

அதில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.