கடலாடியில் கஞ்சா விற்ற நபர் கைது – 4 கிலோ கஞ்சா பறிமுதல்

 

கடலாடியில் கஞ்சா விற்ற  நபர் கைது – 4 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்

கடலாடி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், நேற்று கடலாடி காவல் ஆய்வாளர் தீபா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேருந்து நிலையம் பகுதியில் சந்கேத்திற்குரிய விதமாக நின்ற அதே பகுதியை சேர்ந்த சண்முகையா பாண்டியன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

கடலாடியில் கஞ்சா விற்ற  நபர் கைது – 4 கிலோ கஞ்சா பறிமுதல்

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில் சோதனையிட்டனர். அப்போது, மூட்டைக்குள் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கஞ்சா விற்பனை தொடர்பாக சண்முகையா பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்த போலீசார் அவரை நீதின்ற காவலில் சிறையில் அடைத்தனர்.