“டேய் டாக்ஸியை விடுறியா இல்ல உயிரை விடுறியா” -டாக்ஸி ட்ரைவரை கொலை செய்துவிட்டு டாக்ஸியை திருடும் கூட்டம்.

 

“டேய் டாக்ஸியை விடுறியா இல்ல உயிரை விடுறியா” -டாக்ஸி ட்ரைவரை கொலை செய்துவிட்டு டாக்ஸியை திருடும் கூட்டம்.

டாக்ஸியில் பயணிகள் போல ஏறி ,டாக்ஸி ட்ரைவரை கொலை செய்து விட்டு டாக்ஸியுடன் தப்பிச்செல்லும் கூட்டத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது, டாக்ஸி ட்ரைவர்களிடையே அச்சத்தினை உண்டாக்கியுள்ளது .
உத்திர பிரதேச மாநிலத்தில் பிரதீப் சிங்கல் என்ற டாக்ஸி ட்ரைவர் சொந்தமாக ஒரு டாக்ஸி வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார் .35 வயதான அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் .


அவரின் டாக்ஸியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள பாம்டோலி கிராமத்தில் வசிக்கும் விகாஸ் தோமர் என்ற நபர் பயணியாக ஏறி ,பயணம் செய்தார் .அப்போது திடீரென அவர் யாருமில்லாத ஒரு இடத்தில் டாக்ஸி ட்ரைவரின் கழுத்தில் கத்தியை காமித்து ,உடனே டாக்ஸியை இங்கே நிறுத்து என்றார் .உடனே பயந்த அவர் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினார் .அப்போது எதிர்பாராத விதமாக தோமர் அந்த டாக்ஸி ட்ரைவரின் தலையில் ஒரு பெரிய கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டு ,உடலை அருகிலுள்ள ஒரு கால்வாயில் வீசிவிட்டு ,டாக்ஸியை கடத்திக்கொண்டு போய் விட்டார் .
பிறகு கொஞ்ச தூரத்தில் தயாராக நின்ற அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த டாக்ஸியை 2 லட்ச ரூபாய்க்கு விற்பதற்கான வேலையில் இறங்கினார் .இதற்கிடையில் இரண்டு நாட்களாக டாக்ஸியுடன் பிரதீப்பை காணாமல் அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் தந்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடியதில், அவரை கொன்று விட்டு டாக்ஸியை கடத்திக்கொண்டு போன தோமரை கைது செய்தனர் .அவர் கொடுத்த தகவலின பேரில் ஒரு கால்வாயில் தலையில் காயத்துடன் கிடந்த பிரதீப் உடல் மீட்கப்பட்டது .

“டேய் டாக்ஸியை விடுறியா இல்ல உயிரை விடுறியா” -டாக்ஸி ட்ரைவரை கொலை செய்துவிட்டு டாக்ஸியை திருடும் கூட்டம்.