‘தண்ணி அடிச்சிட்டு வந்து ,அண்ணியின் கையை பிடித்து இழுத்தார்’ – தம்பியை கொன்று சாலையில் வீசிய அண்ணன்..

 

‘தண்ணி அடிச்சிட்டு வந்து ,அண்ணியின் கையை பிடித்து இழுத்தார்’ – தம்பியை கொன்று சாலையில் வீசிய அண்ணன்..

கூட்டு குடும்பத்தில் வசிக்கும் ஒரு குடிகார தம்பியின் தொல்லை தாங்காமல் அவரை, அவரின் அண்ணனே கொலை செய்து சாலையோரம் வீசியுள்ளார் .
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பிஸ்ராக் கிராமத்தில் பீஷம் என்பவரும் அவரின் அண்ணன் தீபக் என்பவரும் கல்யாணமாகி கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர் .இந்நிலையில் தீபக்கின் தம்பி பீஷமுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது .இதனால் தினமும் குடித்து விட்டு வந்து தெருவிலும் ,ஊருக்குள்ளும் பலரிடம் தகராறு செய்துள்ளார் .
அது மட்டுமல்ல அவர் குடித்துவிட்டு வந்து வீட்டிலுள்ள அவரின் அண்ணியின் கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்துள்ளார் .இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீபக் தன்னுடைய தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்து சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ளார் .அப்போது அந்த வழியாக சென்ற சிலர் ரோட்டில் அனாதையாக ஒரு பிணம் கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கூறினார்கள்.

‘தண்ணி அடிச்சிட்டு வந்து ,அண்ணியின் கையை பிடித்து இழுத்தார்’ – தம்பியை கொன்று சாலையில் வீசிய அண்ணன்..

தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து பீஷம்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .பிறகு கொலை வழக்கு பதிவு செய்து ,விசாரணை நடத்தியதில் ,பீக்ஷம்மை அவரின் அண்ணனே கொலை செய்த விவரம் தெரிந்து அவரின் சகோதரர் தீபக்கை கைது செய்து விசாரித்தனர் .அப்போது தீபக் போலீசாரிடம் ,தன்னுடைய சகோதரன் பீஷம் தினமும் குடித்துவிட்டு வந்து, வீட்டிலுள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதால் ,அவரின் தொல்லை தாங்க முடியாமல் அவர் தனது சகோதரனை கொலை செய்தததாக போலீசிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் .இதன்பேரில் தீபக் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீஸ் அவரை சிறையில் அடைத்தது .

‘தண்ணி அடிச்சிட்டு வந்து ,அண்ணியின் கையை பிடித்து இழுத்தார்’ – தம்பியை கொன்று சாலையில் வீசிய அண்ணன்..