மெரினாவில் நண்பரின் கண்களை தோண்டி எடுத்தவர் கைது!

 

மெரினாவில் நண்பரின் கண்களை தோண்டி எடுத்தவர் கைது!

மதுபோதையில் நண்பரின் கண்களை தோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெரினாவில் நண்பரின் கண்களை தோண்டி எடுத்தவர் கைது!

சென்னை மெரினா கடற்கரையில் நண்பர்கள் அசோக சக்கரவர்த்தி – பெரிய பாண்டியன் இருவரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது மது போதையில் இருந்த அசோக சக்கரவர்த்தி, பெரிய பாண்டியனின் தாயை குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் நண்பர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றவே, அசோக சக்கரவர்த்தியின் 2 கண்களையும் பெரிய பாண்டியன் நோண்டி எடுத்துவிட்டார்.

மெரினாவில் நண்பரின் கண்களை தோண்டி எடுத்தவர் கைது!

இதனால் வலி பொறுக்க முடியாமல் அசோக சக்கரவர்த்தி துடிதுடித்து கொண்டிருந்துள்ளார். இதை தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்தவற்றை பெரியபாண்டியன் கூறியதையடுத்து , சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெரிய பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த அசோக பாண்டியனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.