மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் -கடனுக்கு நடந்த கொடுமை .

 

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் -கடனுக்கு நடந்த கொடுமை .

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் -கடனுக்கு நடந்த கொடுமை .
தமிழ்நாட்டின் கடலூரில் உள்ள எல்.ஆர்.பாளையத்தில் வசிக்கும் மதுசூதனன் என்ற 30 வயதான நபர் பார்வதி என்ற 21 வயதான பெண்ணை 2018ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் அந்த மதுசூதனனுக்கு கடந்த ஓராண்டாக கொரானா ஊரடங்கு காரணமாக சரியான முறையில் வேலையில்லை .அதனால் குடும்ப செலவுக்கு பணமில்லாமல் தவித்தார் .அதனால் அவர் அவரின் நண்பர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் கடன் வாங்கியிருந்தார் .

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் -கடனுக்கு நடந்த கொடுமை .


ஆனால் அவரால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியவில்லை .அதனால் அந்த நண்பர்கள் இருவரும் அவரிடம் கடனை கேட்டு டார்ச்சர் செய்தனர் .அதனால் அவர் தன்னுடைய நண்பர்களிடம் கடனுக்கு பதிலாக தன்னுடைய மனைவியோடு சில நாள் இருந்துவிட்டு போகலாம் என்று கூறினார் .அதற்கு அவர்கள் சம்மதித்தார்கள் .
அதனால் அவர் அவரின் மனைவிக்கு விட்டமின் மாத்திரை என்று கூறி சில மயக்க மாத்திரையை கொடுத்து மயக்க நிலைக்கு அனுப்பிவிட்டார் .அதன் பிறகு அவரின் நண்பர்கள் அவரின் வீட்டிற்கு வந்து அவரின் மனைவியோடு உல்லாசம் அனுபவித்து விட்டு போனார்கள் .சில நாள் கழித்து அவரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது .அதன் பிறகு அவர் ஒரு கட்டையை எடுத்து அவரின் கணவரை தாக்கினார் .பிறகு பார்வதி திங்களன்று தனது கணவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மீது பன்ருட்டியில் உள்ள அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.