மச்சினிச்சியை தனி அறையில் அடைத்து 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் ! மச்சினிச்சி புகாரில் மாமாவுக்கு போலீஸ் வலை !!

 

மச்சினிச்சியை தனி அறையில் அடைத்து 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் ! மச்சினிச்சி புகாரில் மாமாவுக்கு போலீஸ் வலை !!

மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டும் என மச்சினிச்சியை அழைத்து வந்து பாலியல் தொல்லை !

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் 19 வயது சிறுமியை அக்கா கணவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக சிறுமியின் அக்கா கணவர் தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியதாக சிறுமி கூறினார். அக்க கணவரால் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து தப்பித்து வந்து தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்தார். பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட மைத்துனர் மீது காவல்துறையினர் பாலியல் பலாத்கார வழக்கைப் பதிவு செய்து, அவரைத் தேடத் தொடங்கினர்.

மச்சினிச்சியை தனி அறையில் அடைத்து 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் ! மச்சினிச்சி புகாரில் மாமாவுக்கு போலீஸ் வலை !!
விசாரணையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை கவனித்துக்கொள்ள மனைவியின் தங்கையை அஜய் என்பவர் அழைத்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அஜய் பிதாம்பூரில் வசிக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். 17 மார்ச் 2020 அன்று மாமியார் வீட்டிற்கு சென்ற அஜய் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றும் அவளை பார்த்துக்கொள்ள மனைவியின் தங்கையை அனுப்பு மாறு கூறி அழைத்து சென்றுள்ளார். வீட்டை கவனித்துக்கொள்வதற்கான சாக்கில் பிதாம்பூருக்கு சிறுமியை அழைத்துச் சென்றார், அங்கு இரண்டு நாட்கள் சகோதரி வீட்டில் தங்கவைத்து பின்னர் தன்னுடைய நிறுவனத்தைக் காண்பிக்கும் சாக்குப்போக்கில் அழைத்துச் சென்று ஒரு வாடகை அறையில் பூட்டி இரண்டு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.