மம்தாவை கீழே தள்ளி எட்டி உதைத்த மர்மநபர்கள்! காலில் பலத்த காயம்…

 

மம்தாவை கீழே தள்ளி எட்டி உதைத்த மர்மநபர்கள்! காலில் பலத்த காயம்…

நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுவை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். பின்னர் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த போது அவரை மர்ம கும்பல் சூழ்ந்து தாக்கியதாகவும் இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மம்தாவை கீழே தள்ளி எட்டி உதைத்த மர்மநபர்கள்! காலில் பலத்த காயம்…

தொடர்ந்து காரில் அமர்ந்தவாறு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, “பிரசாரத்தை முடித்து நான் காரில் ஏற முயன்ற போது 4 முதல் 5 பேர் என்னை கீழே பிடித்து தள்ளி எட்டி உதைத்தனர். இதில் காலில் காயம் ஏற்பட்டது. எனக்கு எந்த போலீசாரும் பாதுகாப்பு தரவில்லை.இது ஒரு சதி. தக்கப்பட்டபோது என்னை சுற்றி போலீசார் இல்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளேன்” எனக் கூறினார்.

இதுகுறித்து பாஜக தரப்பில் தெரிவிக்கையில், “மம்தா வேட்புமனு தாக்கல் செய்தது முதல் அவர் காரில் ஏறிய வரை 300 போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். தேர்தல் என்பதால் அனுதாப அலை ஏற்படுத்த நாடகம் ஆடுகிறார்” என தெரிவித்துள்ளது.