தாமரையிடம் பணம் வாங்கிக்கோங்க… ஜோடி பூக்களுக்கு ஓட்டு போடுங்க.. மம்தாவின் மருமகன் வேண்டுகோள்

 

தாமரையிடம் பணம் வாங்கிக்கோங்க… ஜோடி பூக்களுக்கு ஓட்டு போடுங்க..  மம்தாவின் மருமகன் வேண்டுகோள்

பா.ஜ.க.விடம் பணம் வாங்கிக்கோங்க ஆனால் ஜோடி பூக்களுக்கு ஓட்டு போடுங்க என்று மேற்கு வங்க மக்களிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தினார்.

மேற்கு வங்கம் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் டைமண்ட் ஹார்பர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வாக்குகளை விலைக்கு வாங்குகிறது.

தாமரையிடம் பணம் வாங்கிக்கோங்க… ஜோடி பூக்களுக்கு ஓட்டு போடுங்க..  மம்தாவின் மருமகன் வேண்டுகோள்
அபிஷேக் பானர்ஜி

நீங்கள் (மக்கள்) பா.ஜ.க.விடம் பணம் வாங்கி கொள்ளுங்கள். ஆனால் உங்கள் வாக்குகளை ஜோடி பூக்களுக்கு (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னம்) போடுங்க. தங்களது கலாச்சாரத்தை மேற்கு வங்கத்தில் விதிக்க முயற்சி செய்யும் வெளியாட்களை ஒழிப்பதற்கான யுத்தம். என் தொண்டையை வெட்டினாலும் ஜெய் பெங்கால் மற்றும் ஜெய் மம்தா பானர்ஜி என்றுதான் சொல்வேன்.

தாமரையிடம் பணம் வாங்கிக்கோங்க… ஜோடி பூக்களுக்கு ஓட்டு போடுங்க..  மம்தாவின் மருமகன் வேண்டுகோள்
திரிணாமுல் காங்கிரஸ்

எதுவாக இருந்தாலும் மம்தா பானர்ஜி டெல்லியின் முன் தலை குனிய மாட்டார். எதிர்வரும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 250க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். அதேசமயம் காவி கட்சி இரட்டை இலக்கை தாண்டுவது கடினம். தொடர்ந்து 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கபோகிறது. மேலும் 50 ஆண்டுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.