பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்… மனதை வென்ற மம்தா பானர்ஜி

 

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்… மனதை வென்ற மம்தா பானர்ஜி

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கொரோனா வைரஸிலிருந்து விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரசுக்கு பா.ஜ.க. கடும் சவால் கொடுத்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. மம்தா பானர்ஜிக்கு ஷாக் கொடுத்தது. மேலும் அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெற அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற உறுதியில் பா.ஜ.க. தீயாக வேலை செய்ய தொடங்கியுள்ளது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்… மனதை வென்ற மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் மாதந்தோறும் மேற்கு வங்கத்துக்கு 2 நாட்கள் சென்று கட்சி தொண்டர்களை உற்சாக படுத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்துக்கு 2 நாள் பயணமாக சென்ற போது, அவரது பாதுகாப்பு வாகனங்கள் கல் வீசி தாக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இதற்கு காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியது. ஆனால் மம்தா பானர்ஜியோ பா.ஜ.க.வே இந்த காரியத்தை செய்து விட்டு எங்கள் மீது பழி போடுகிறது என்று பதிலடி கொடுத்தார். இந்த விவகாரத்தில் ஜே.பி.நட்டாவும், மம்தா பானர்ஜியும் கடுமையாக வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்… மனதை வென்ற மம்தா பானர்ஜி
பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில் நேற்று ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இந்த தகவலை அறிந்த மம்தா பானர்ஜி, நட்டா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்தார். மம்தா பானர்ஜி இது தொடர்பாக டிவிட்டரில், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான தகவலை கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் என்னுடைய பிராத்தனைகள் இருக்கும் என்று பதிவு செய்து இருந்தார். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும், நட்டா குணமடைய வாழ்த்து தெரிவித்து அனைவரது மனதையும் மம்தா பானர்ஜி வென்று விட்டார்.