மோடி மூளையில் பிரச்னை இருக்கிறது; ஒரு நட் லூசாகிவிட்டதோ?- மம்தா பானர்ஜி

 

மோடி மூளையில் பிரச்னை இருக்கிறது; ஒரு நட் லூசாகிவிட்டதோ?- மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்கவுள்ளது. இதனையடுத்து மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“தொழில்துறை வளர்ச்சியை மந்தமாக்கிவிட்டார்.. தாடியை மட்டும் தான் வளர்க்கிறார்..!”: பிரதமர் மோடி மீது மம்தா கடும் தாக்கு!

மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்றைய பரப்புரையின்போது, “மோடி தன்னைத்தானே விவேகானந்தர் எனக் கூறிக் கொள்கிறார். சில சமயங்களில் விளையாட்டு அரங்கங்களுக்கு தன் பெயரிடுகிறார். ஒரு நாள் இந்தியாவின் பெயரையும் மாற்றி அவருடைய பெயரை வைத்தாலும் வைத்து விடுவார். இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது. ஒரு நட் லூசாக இருக்கும் என நினைக்கிறேன். பிரதமரின் மோடி மட்டுமே வளர்கிறது. மோடி மூளையில் பிரச்னை உள்ளது. கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களிலும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன” என கடுமையாக விமர்சித்தார்.