ஆம்பன் புயல்: “இதுபோன்ற ஒன்றை எனது வாழ்க்கையில் பார்த்ததில்லை!” – மமதா பானர்ஜி

 

ஆம்பன் புயல்: “இதுபோன்ற ஒன்றை எனது வாழ்க்கையில் பார்த்ததில்லை!” – மமதா பானர்ஜி

கொல்கத்தா: ஆம்பன் புயல் போன்ற ஒன்றை தனது வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறினார்.

கடந்த சில நாட்களாக மேற்கு வங்கம், ஒடிசா, வங்கதேசம் ஆகிய மாநிலங்களை ஆம்பன் புயல் அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து நேற்று மாலை மேற்கு வங்கத்தின் சுந்தரவனக்காடு பகுதியில் ஆம்பன் புயல் கரையை கடந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி புயலாக ஆம்பன் கருதப்படுகிறது. நாட்டின் கிழக்கு கடற்கரையிலும், வங்கதேசத்திலும் ஆம்பன் புயல் பேரழிவை ஏற்படுத்தி சென்றதுடன் பலரை பலியாக்கி உள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பாய்ந்தது. அத்துடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஆம்பன் புயல்: “இதுபோன்ற ஒன்றை எனது வாழ்க்கையில் பார்த்ததில்லை!” – மமதா பானர்ஜி

ஆம்பன் புயல் இன்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் பலவீனமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயலால் வங்கதேசத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் 72 பேர் ஆம்பன் புயலால் பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். “என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒன்றை நான் எனது வாழ்க்கையில் பார்த்ததில்லை. மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் சேதமடைந்துள்ளன. பல பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. நாங்கள் தகவல் தொடர்புகளை இழந்துவிட்டோம்” ” என்று மமதா பானர்ஜி கூறினார்.