மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் மரணம்!

 

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.26 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. 3,890 பேர் உயிரிழந்ததாகவும் 3.53 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாட்டில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்புகள் அதிகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் மரணம்!

மயானங்களில் உடல்களை எரிக்க இடமில்லாமல் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டிருப்பதும் பிணங்கள் நதிகளிலும் ஏரிகளிலும் வீசப்பபடும் சம்பவங்களும் பீதியை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த கொரோனா பாதிப்பு இரண்டாம் அலைக்கு பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனாவால் கொல்கத்தாவில் சிகிச்சை பெற்று வந்த ஆஷிம் பானர்ஜி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.