தனியார் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!

 

தனியார் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!

நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. கூடலூரை அடுத்த பிதர்க்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனப்பஞ்சோரை வனப்பகுதியில் தனியார் நிலத்தின் அருகில் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்துகிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், உயிரிழந்த யானைக்கு வனத்துறை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டர்.

பின்னர் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது ஆண் யானை என்றும், தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.