வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் பிணம் – யார் அவர் ? போலீசார் விசாரணை
ஈரோடு வைராபாளையம் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே, காவிரி கரையோரம் உள்ள வாய்க்காலில் ஒரு ஆண் சடலம் மிதந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து வந்து அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இறந்த நபருக்கு 55 வயது இருக்கலாம் என்றும், இறந்தவர் உடலில் ஆடைகள் எதுவும் இல்லை என்றும் போலீசார் கூறினர். தண்ணீரில் உடல் அழுகிய நிலையில், அடையாளம் தெரியவில்லை என்பதால், அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்கிற அடையாளம் தெரியவில்லை.
அந்த நபர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக , சமீபத்தில் காணாமல் போனவர்கள் விவரம் குறித்து அப்பகுதி காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா ?அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.