மலேசியா: 14 வயது சிறுவனின் உடல் முதலையின் வயிற்றில் இருந்து கண்டெடுப்பு!

 

மலேசியா: 14 வயது சிறுவனின் உடல் முதலையின் வயிற்றில் இருந்து கண்டெடுப்பு!

மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றங்கரையோரம் சிப்பியை சேகரிக்க சென்ற சிறுவனின் உடல் பாகங்கள் முதலையின் வயிற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா: 14 வயது சிறுவனின் உடல் முதலையின் வயிற்றில் இருந்து கண்டெடுப்பு!
மலேசியாவின் கூச்சிங் (Kuching) என்ற இடத்தில் ஆற்றங்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை 14 வயது சிறுவன் ரிக்கி சிப்பியை சேகரிக்க சென்றான். அப்போது ஆற்றில் இருந்த 14 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று சிறுவனைக் கடித்து ஆற்றுக்குள் இழுத்தது. இதனால் சிறுவனின் உறவினர்கள் உதவி செய்ய முயன்றனர். உள்ளூர் ஆட்களைக் கூட்டிவந்து சிறுவனைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள்ளாக அது சிறுவனை இழுத்துக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பயங்கர முதலையை தேடும் வேட்டையில் கிராம மக்களும், அதிகாரிகளும் ஈடுபட்டனர். கோழி இறைச்சியை கட்டி தொங்கவிட்டு முதலைக்காக காத்திருந்தனர். கோழி இறைச்சியை சாப்பிட வந்த முதலையை மக்கள் லாவகமாக பிடித்தனர்.

மலேசியா: 14 வயது சிறுவனின் உடல் முதலையின் வயிற்றில் இருந்து கண்டெடுப்பு!
முதலையை கொன்று அதன் வயிற்றைக் கிழித்து பார்த்தபோது சிறுவன் ரிக்கியின் உடலை மற்றும் எலும்பு மிச்சங்கள் வயிற்றில் இருந்ததை கண்டறிந்தனர். முதலையின் வயிற்றில் கிடைத்த சிறுவனின் உடல் பாகங்களை வைத்து அவனுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. சிறுவன் ஒருவன் முதலையால் கடித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.