மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்தும் மகளிருக்கான இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்!
Feb 3, 2021, 18:12 IST1612356142000
மகளிருக்கான இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் வரும் வியாழக்கிழமை என்று நடத்தப்படவிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக “மய்யம் மாதர் படை” நடத்தும் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம், சென்னை மண்டல செயலாளர் திருமதி கமீலா நாசர் முன்னிலையில், திருமதி மோகன் தாஸ் தலைமையில் வரும் பிப்ரவரி 4(நாளை) வியாழக்கிழமை அன்று காலை 11 மணியளவில் ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து மகளிரும் இதில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாளை நமதே!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.