புதுச்சேரியில் ம.நீ.ம ஆட்சி… கமல் ஆசை!

 

புதுச்சேரியில் ம.நீ.ம ஆட்சி… கமல் ஆசை!

புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் ஆட்சி அமைந்திடும் சூழலை உருவாக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

புதுச்சேரியில் ம.நீ.ம ஆட்சி… கமல் ஆசை!
புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடந்தது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மேலும், புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பிரிவுகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலையும் கமல்ஹாசன் அறிவித்தார்.

புதுச்சேரியில் ம.நீ.ம ஆட்சி… கமல் ஆசை!
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கமல் பேசும் போது, “புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்த வேண்டும். அடுத்து மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைக்கும் சூழலை நிர்வாகிகள் அங்கு ஏற்படுத்த வேண்டும். கட்சி நிர்வாகிகளை நான் நேரடியாக கண்காணித்து வருகிறேன். சரியாக செயல்படாத, பணியாற்றாத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்” என்று எச்சரித்தார்.