“இதை எழுதி மாட்டுங்கள் நாய் நரிகள் அணுகாது” : கமலின் சுளீர் ட்வீட்!!

 

“இதை எழுதி மாட்டுங்கள்  நாய் நரிகள் அணுகாது” : கமலின் சுளீர் ட்வீட்!!

வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

“இதை எழுதி மாட்டுங்கள்  நாய் நரிகள் அணுகாது” : கமலின் சுளீர் ட்வீட்!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளுடன் பல்வேறு கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது .அதிமுகவுடன் பாஜக ,பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ள நிலையில், திமுகவுடன் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. இதற்கான தொகுதி பங்கீடுகள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த சூழலில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற இந்திய ஜனநாயக கட்சியின் ரவி பச்சமுத்து ஆகியோர் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளனர்.

“இதை எழுதி மாட்டுங்கள்  நாய் நரிகள் அணுகாது” : கமலின் சுளீர் ட்வீட்!!

மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ள இந்த அணியின் முதல்வர் வேட்பாளர் கமல் ஹாசன் என்றும் சரத்குமார் அறிவித்துள்ளார்.இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.இந்த சூழலில் கமல் ஹாசன் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பரப்புரையை நடத்தி வருகிறார்கள். நேற்று ஆவடியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.