கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்

 

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீஸார், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சீர்காழி வேட்டங்குடியைச் சேர்ந்த பழனி (19), செங்கல்பட்டை சேர்ந்த வாஸித்தா (21) மற்றும் ராம்குமார் (23) ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பங்காளி வினோத் மற்றும் அம்மா மணிகண்டன் ஆகியோரையும், போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.