கமல்ஹாசன் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் மகேந்திரன்

 

கமல்ஹாசன் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் மகேந்திரன்

கமல்ஹாசன் மீது கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் சந்தித்த தோல்விக்கான காரணம் குறித்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மநீம துணைத்தலைவர் மகேந்திரன் இன்று விலகியுள்ளார்.

கமல்ஹாசன் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் மகேந்திரன்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரன், “கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை. கமல் இனி மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. கமல் நல்ல தலைமை கொண்டவராக மீண்டும் செயல்பட வேண்டும். கட்சி தொண்டர்கள் கொடுத்த உற்சாகமும், உத்வேகமும்தான் எனக்கு வலிமையை கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றி” எனக் கூறினார்.