“அண்ணன் படுத்த கட்டில்ல அடுத்தவனை படுக்க வைக்கிறியே” -கள்ளகாதலர்களை கொன்ற கொழுந்தன்

 

“அண்ணன் படுத்த கட்டில்ல அடுத்தவனை படுக்க வைக்கிறியே” -கள்ளகாதலர்களை கொன்ற கொழுந்தன்

தனது அண்ணிக்கு கள்ள காதல் ஏற்பட்டதால் கோபமடைந்த கொழுந்தனார், கள்ள காதலர்களை ட்ராக்டர் ஏற்றி கொன்ற சம்பவம் நடந்துள்ளது .

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சாப்பல்கான் கிராமத்தில் வசிக்கும்
32 வயதான மரியா லால்சாரேவின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் , அவர் தனது மாமானார் மற்றும் கொழுந்தனாரோடு வாழ்ந்து வந்துள்ளார் .
இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் ஹர்பக் பகவத் (27) என்ற திருமணமான ஒருவருடன் அவர் கள்ள உறவு கொண்டிருந்ததால் அவரின் கொழுந்தன் மற்றும் மாமனார் அவர் மீது கோபமாக இருந்தனர் .அவரின் கொழுந்தனாரும் அடிக்கடி அண்ணியின் கள்ள காதலனிடம் கள்ள காதலை கைவிடுமபடி மிரட்டி வந்தனர்
அதனால் மார்ச் 30 ம் தேதி, பகவத் மற்றும் மரியா ஆகியோர் அந்த ஊரிலிருந்து தப்பி ஓடி குஜராத்துக்கு போனார்கள் . அதன்பின்னர் அவரது குடும்பத்தினரால் அவர்கள் காணாமல் போனதாக பொலிஸில் புகார் பதிவு செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி ஏப்ரல் 22 ம் தேதி, குஜராத்தில் இருந்து காவல்துறையினர் அவர்களை மீண்டும் அழைத்து வந்தனர். அதன் பின்னர் அவர்கள் கிராமத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.
அதனால் அவர்களின் மீது அந்த பெண்ணின் மாமனாரும் கொழுந்தனாரும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டரை ஏற்றி விட்டனர்
அதனால் காயமடைந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் வழியில் உயிரிழந்தார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.மரியாவின் கொழுந்தனார் தனது கணவர் மற்றும் மரியாவைக் கொன்றதாக பகவத்தின் மனைவி விகாஸ் லால்சாரே குற்றம் சாட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.அதனால் போலீசார் விகாஸ் மற்றும் அவரது தந்தை மீது ஐபிசி பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“அண்ணன் படுத்த கட்டில்ல அடுத்தவனை படுக்க வைக்கிறியே” -கள்ளகாதலர்களை கொன்ற கொழுந்தன்