“உன்னால ஊருக்குள்ள தலை காமிக்க முடியல’ -கூடப்பிறந்தவளை கொன்று கூடையில் அடைத்த சகோதர்கள்
விவகாரத்து பெற்று வீட்டிலிருந்த சகோதரியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அவரின் சகோதர்களே, அவரை கொன்று எரித்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பிரதீபா மத்ரே என்ற 29 வயது பெண், தன்னுடைய சகோதர்களான நாதா அசோக் பாட்டீல் (31), பகவான் அசோக் பாட்டீல் (24), பாலாஜி அசோக் பாட்டீல் (20) மற்றும் பாண்டுரங் அசோக் பாட்டீல் ஆகியோருடன் வசித்து வந்தார் .சகோதர்கள் அனைவரும் சேர்ந்து தங்களின்
சகோதரி ப்ரதீபாவுக்கு ஒருவரை திருமணம் செய்துவைத்தனர் .ஆனால் அந்த பெண்ணோ கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே கணவனை விவகாரத்து செய்து விட்டு அண்ணன்களோடு வாழ்ந்து வந்தார் .
இந்நிலையில் அந்தப்பெண் அந்த ஊரிலுள்ள ஒரு மதுபான பாரில் வேலைக்கு சேர்ந்தார் .அங்கு அவர் சிலரிடம் பழகியுள்ளார் ,இந்த விஷயம் அவரின் சகோதர்களுக்கு பிடிக்கவில்லை .இதனால் அவர்கள் அவரை கண்டித்தார்கள் .ஆனால் மீண்டும் அவர் அந்த பாருக்கு வேலைக்கு சென்றார் .இதனால் கடுப்பான அவரின் சகோதரர்கள் அவரை கொலை செய்து ஒரு கூடைக்குள் அடைத்து ,ஆற்றங்கரையோரம் எடுத்து சென்று அவரை எரித்துள்ளனர் .
இந்த விஷயம் உள்ளூர்வாசிகள் மூலம் போலீசுக்கு தெரிந்து ,அவர்கள் விசாரணை நடத்தி சகோதரியை கொன்ற நான்கு சகோதர்களில் மூவரை கைது செய்தனர் .ஒருவர் தலைமறைவாக உள்ளார் அவரை தேடி வருகின்றனர் .