கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது : அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

 

கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது : அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது : அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. இரண்டாம் அலை கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 31,222 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,30,58,843 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா இரண்டாம் அலைக்கு இதுவரை 4,41,042 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் 69,90,62,776 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது : அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

இந்நிலையில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அம்மாநில அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் ஊரடங்கில் தளர்வுகள் உள்ள நிலையில் பல கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கேரளாவில் பாதிப்பு அதிகமாகி வந்த நிலையில் கடந்த வாரம் மகாராஷ்டிராவில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. இதன்மூலம் அங்கு கொரோனா மூன்றாம் அலை ஆரம்பமாகியுள்ளது.