கொரானா டெஸ்ட்டுக்கு வந்த பெண் -அந்தரங்க பகுதியை சோதனை செய்த லேப் டெக்னீசியன் -பலாத்கார வழக்கில் கைது..

 

கொரானா டெஸ்ட்டுக்கு வந்த பெண் -அந்தரங்க பகுதியை  சோதனை செய்த லேப் டெக்னீசியன் -பலாத்கார வழக்கில் கைது..

கொரானா ஒரு பக்கம் கொடுமை மக்களை செய்கிறதென்றால் ,அதை வைத்து பலர் செய்யும் சேட்டைகளுக்கு அளவேயில்லை .ஒரு டாக்டர் கொரானா நோயாளி பெண்ணை பலாத்காரம் செய்த கொடுமைக்கு பிறகு ,ஒரு லேப் டெக்னீசியன்,கொரானா டெஸ்ட் செய்கிறேன் என்று ஒரு பெண்ணின் தனிப்பட்ட பகுதியிலிருந்து மாதிரி எடுத்து வன்கொடுமை செய்துள்ளார் .

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ஒரு பெண்ணுக்கு கொரானா பரிசோதனை செய்வதற்கான மாதிரியை அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பிலிருந்து எடுத்ததால் பெரும் சர்ச்சைக்குள்ளான அந்த நபர், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார் .

கொரானா டெஸ்ட்டுக்கு வந்த பெண் -அந்தரங்க பகுதியை  சோதனை செய்த லேப் டெக்னீசியன் -பலாத்கார வழக்கில் கைது..
கடந்த வாரம் அங்குள்ள ஒரு ஷாப்பிங் மாலில் வேலை செய்யும் 25 பெண்களுக்கு ஒன்றாக கொரானா பரிசோதனை செய்யப்பட்ட போது ,ஒரு பெண்ணுக்கு மட்டும் மாதிரி எடுக்கும்போது அந்த ஆய்வக வல்லுநர் அவரின் அந்தரங்க பகுதியிலிருந்து மாதிரி எடுத்துள்ளார் .இதனால் அந்த பெண் அங்கிருந்த போலீசாரிடம் இது பற்றி புகார் கூறினார் .பிறகு போலீசார் அந்த லேப் டெக்னீசியன் மீது செவ்வாய்க்கிழமையன்று வழக்கு பதிவு செய்தனர் .

இந்த சம்பவம் அமராவதி மாவட்டத்தில் பத்னேராவில் நடந்துள்ளது. அந்த லேப் டெக்னீசியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யசோமதி தாக்கூர் கூறியுள்ளார்.இந்த சம்பவம் பற்றி பேசிய சிவசேனா செய்தித் தொடர்பாளர் மனிஷா கயாண்டே, “கொரானா மருத்துவமனைகள்மற்றும் ஆய்வக மையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரினார்.கொரானா டெஸ்ட்டுக்கு வந்த பெண் -அந்தரங்க பகுதியை  சோதனை செய்த லேப் டெக்னீசியன் -பலாத்கார வழக்கில் கைது..