மகாராஷ்டிரா: இரும்பு ஆலையில் வெடிவிபத்து – 2 பேர் பலி

 

மகாராஷ்டிரா: இரும்பு ஆலையில் வெடிவிபத்து – 2 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் இரும்பு எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். ஒருவர் பயங்கர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் கோபோலி பகுதியில் இரும்பு எஃகு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா: இரும்பு ஆலையில் வெடிவிபத்து – 2 பேர் பலிமகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கோபோலி என்ற இடத்தில் இரும்பு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று நள்ளிரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றி வந்த சுபாஷ் வஞ்சலே (55), தினேஷ் சவான் (55), பிரமோத் ஷர்மா (30) படுகாயம் அடைந்தனர். இதில் தினேஷ் சவான், பிரமோத் சர்மா பரிதாபமாக உயிரிழந்தனர். சுபாஷ் வஞ்சலேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா: இரும்பு ஆலையில் வெடிவிபத்து – 2 பேர் பலிநாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல ஆலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ஊரடங்குக்குப் பிறகு தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.