போதை பொருள் வழக்கு… நடிகை கங்கனா ரனாவத்திடம் விசாரியுங்க.. மகாராஷ்டிரா அரசு உத்தரவு…

 

போதை பொருள் வழக்கு… நடிகை கங்கனா ரனாவத்திடம் விசாரியுங்க.. மகாராஷ்டிரா அரசு உத்தரவு…

போதை பொருள் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத்திடம் விசாரணை நடத்த மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அத்யாயன் சுமன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நடிகை கங்கனா ரனாவத் போதைபொருட்களை பயன்படுத்துவதாகவும், தன்னையும் மருந்துகளை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். அந்த பேட்டியை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரனாவத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் சுனில் பிரபு மற்றும் பிரதாப் சர்நாயக் ஆகியோர் மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு கோரிக்கை விடுத்தனர்.

போதை பொருள் வழக்கு… நடிகை கங்கனா ரனாவத்திடம் விசாரியுங்க.. மகாராஷ்டிரா அரசு உத்தரவு…
கங்கனா ரனாவத்

இதனையடுத்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், அத்யாயன் சுமன் பேட்டி அடிப்படையில் கங்கனா ரனாவத் போதைபொருள் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார். முன்னதாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், மும்பை மற்றும் மகாராஷ்டிரா போலீசுக்கு எதிரான கங்கானா ரனாவத்தின் தொடர் தாக்குதலுக்கு அனில் தேஷ்முக் கண்டனம் தெரிவித்தார்.

போதை பொருள் வழக்கு… நடிகை கங்கனா ரனாவத்திடம் விசாரியுங்க.. மகாராஷ்டிரா அரசு உத்தரவு…
அத்யாயன் சுமன்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மிகவும் வெளிப்படையாக பேச கூடியவர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக அவர் கூறுகையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு மும்பையில் தான் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வில் உள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார். இது மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மறைமுகமாக கங்கனா ரனாவத்தை கடுமையாக சாடினார். ஆனால் கங்கனா ரனாவத அதற்கெல்லாம் அஞ்சாமல் பதிலடி கொடுத்து வருகிறார்.