அரபிக்கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்…!!

 

அரபிக்கடலில் இன்று  உருவாகிறது நிசர்கா புயல்…!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கத்திரி வெயில் கடந்த 28 ஆம் தேதியே முடிந்து விட்டது. ஆனால் கோடை வெப்பம் குறைந்த பாடில்லை. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக உள்தமிழகம், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென்தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் கூறியது.

அரபிக்கடலில் இன்று  உருவாகிறது நிசர்கா புயல்…!!

அதன்படி தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும். இது வரும் 3 ஆம் தேதி மகாராஷ்டிரா மாற்று குஜராத் நோக்கி செல்லும் என்றும் கூறியது.

அரபிக்கடலில் இன்று  உருவாகிறது நிசர்கா புயல்…!!

இந்நிலையில் அரபிக்கடலில் இன்று நிசர்கா புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிசர்கா புயல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது என்றும் காற்றழுத்ததாழ்வு மண்டலம் பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.