அலுவலக பணிகளில் மராத்தியை பயன்படுத்துங்க.. இல்லைன்னா சம்பள உயர்வு கட்.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை

 

அலுவலக பணிகளில் மராத்தியை பயன்படுத்துங்க.. இல்லைன்னா சம்பள உயர்வு கட்.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு மராத்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து துறைகள், உள்ளூர் அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ பணிகளில் மராத்தி மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அலுவலக பணிகளில் மராத்தியை பயன்படுத்துங்க.. இல்லைன்னா சம்பள உயர்வு கட்.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை

மகாராஷ்டிரா அரசின் மராத்தி மொழி துறை தொடர்பாக அனைத்து துறைகளுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அனைத்து துறைகள், உள்ளூர் அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ பணிகளில் மராத்தி மொழியை பயன்படுத்துவது கட்டாயம். பல துறைகள் இன்னும் ஆங்கில மொழியில் சுற்றறிக்கை, அரசாங்க தீர்மானங்களை வெளியிடுகின்றன. பல துறைகளின் வலைத்தளங்களும் ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளன. இதேபோல் பல நகராட்சி கார்ப்பரேஷன்கள் அறிவிப்புகள், கடிதங்கள், விண்ணப்பங்கள் மற்றும் மாதிரிகளை ஆங்கிலத்தில் வெளியிடுகின்றன. மக்கள் பிரநிதிகள் இதுதொடர்பாக அடிக்கடி புகார்கள் அளிக்கின்றனர்.

அலுவலக பணிகளில் மராத்தியை பயன்படுத்துங்க.. இல்லைன்னா சம்பள உயர்வு கட்.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை

உத்தியோகப்பூர்வ பணிகளில் வேண்டும் என்றே மராத்தி மொழியை பயன்படுத்தவில்லை என கண்டறியப்பட்ட பணியாளர்களுக்கு தண்டனையாக, எச்சரிக்கை, ரகசிய அறிக்கைகளில் குறிப்பிடுவது, கண்டிப்புகளை வெளியிடுவது மற்றும் வருடாந்திர சம்பள அதிகரிப்பை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து அரசு தலைவர்களையும் மாநில அரசு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.