மகாராஷ்டிரா கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

 

மகாராஷ்டிரா கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் இருந்த ஜிலானி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் அங்கு வசித்து வந்தவர்கள் பலரும் இடர்பாடுகளில் சிக்கினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேசிய மீட்பு படையினர் தொடர்ந்து அங்கு 3 ஆம்நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோர விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர்.அதில் 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 வயதிற்கு உட்பட்ட 11 குழந்தைகள் இறந்துள்ளனர். 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டடம் மோசமான நிலையில் இருந்ததால் இத்தனை உயிர்கள் பறிபோயுள்ளதாக கூறப்படுகிறது.