தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: ஜெயராஜின் மனைவி, மகள்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை!

 

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: ஜெயராஜின் மனைவி, மகள்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காகக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை பலமாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: ஜெயராஜின் மனைவி, மகள்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை!

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தந்தை, மகனின் உடல்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்துள்ள நிலையில், உறவினர்கள் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அவர்களைத் தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை பெற மாட்டோம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஜெயராஜின் மனைவி, மகள்கள் தங்களது தரப்பு கோரிக்கையையும் சாட்சிகளையும் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து வருகின்றனர்.